சினிமா

எந்த நடிகருக்கும் நான் கதை சொல்லவில்லை: பா.ரஞ்சித் விளக்கம்

Published On 2016-08-22 07:54 GMT   |   Update On 2016-08-22 07:54 GMT
எந்த நடிகருக்கும் தான் கதை சொல்லவில்லை என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அடுத்ததாக பா.ரஞ்சித், சூர்யாவுக்கு கதை சொல்லியதாகவும், அந்த படத்தில் சூர்யா பாக்சராக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இதற்கிடையில், விஜய் தனக்கும் ஒரு கதை தயார்செய்ய ரஞ்சித்திடம் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால். இந்த செய்திகளுக்கு எல்லாம் பா.ரஞ்சித் தரப்பிலிருந்து மறுப்பு எழுந்துள்ளது. அவர் தற்போது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருப்பதாகவும், கதை முழுவதும் தயாரானவுடன் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், அவர் இதுவரை எந்த நடிகர்களுக்கும் கதை சொல்லவில்லை என்றும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை யாரும் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Similar News