சினிமா (Cinema)

விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா

Published On 2017-05-12 10:05 GMT   |   Update On 2017-05-12 10:05 GMT
தமிழ் சினிமாவில் தான் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன் என்றும், ஜெயிப்பேன் என்றும் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்திருக்கும் ரெஜினா கூறியிருக்கிறார்.
சமந்தாவை போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமான நடித்து இருக்கிறார்.

சமீபத்தில், ரெஜினா நடித்து வெளியான ‘ மாநகரம்‘ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத் திருக்கிறது. உதயநிதியுடன் ரெஜினா நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் திரைக்கு வந்து இருக்கிறது. இது தவிர ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம் -2’ , ஆகிய படங் களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.



தமிழ்பட வாய்ப்பு குறித்து ரெஜினாவிடம் கேட்ட போது...

“ தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் அதிகம் சாதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். சில தமிழ் படங்களில் நடித்தேன். இதில் ‘மாநகரம்’ எனது தமிழ் பட பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அவர் மிகவும் எளிமையான மனிதர். அதிகம் பேசமாட்டார். அவருடைய நகைச்சுவை உணர்வு தனித்தன்மை கொண்டது. அவர் எதை சொன்னாலும் பாசிட்டிவாகவே இருக்கும்.

நான் எப்போதோ தமிழ் படங்களில் ஜெயித்திருக்க வேண்டும். அதற்கான நாள் தள்ளிக்கொண்டே போனது. இப்போது அந்த வாய்ப்பை கடவுள் தந்திருக்கிறார். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்” என்றார்.

Similar News