சினிமா (Cinema)

பொன்னியின் செல்வன் கதையில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி

Published On 2019-02-18 05:46 GMT   |   Update On 2019-02-18 05:46 GMT
மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அவர் நடிப்பது உறுதி என்றும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. #VijaySethupathi
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தேதி பிரச்சனையால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது.



இதுபற்றி படக்குழுவுக்கு நெருங்கி வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆவலோடு இருப்பதாகவும், இந்த படத்துக்காக மொத்தமாக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. #Maniratnam #PonniyinSelvan #VijaySethupathi

Tags:    

Similar News