சினிமா (Cinema)
நயன்தாரா, விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா

Published On 2019-08-27 11:55 GMT   |   Update On 2019-08-27 11:55 GMT
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. 

‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாரா படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது. 



அதன் பிறகு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய ‘அவள்’ என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News