சினிமா
மோகன்லால், ஜீத்து ஜோசப்

திரிஷ்யம் 2-ம் பாகம் உருவாகிறது?

Published On 2020-05-21 04:45 GMT   |   Update On 2020-05-21 04:45 GMT
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.



தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. கேரளாவில் லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் தமிழில் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Tags:    

Similar News