சினிமா
சுரேஷ் காமாட்சி

மீண்டும் படம் இயக்கும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

Published On 2021-01-29 05:30 GMT   |   Update On 2021-01-29 05:39 GMT
‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
'அமைதிப்படை-2', 'கங்காரு', போன்ற படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகமான படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தையும் அவரே தயாரித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.



இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ம.காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி அப்படம் உருவாகவுள்ளதாம்.

அந்த நாவலை படமாக்குவதற்கான உரிமையை ம.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. தற்போது அதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News