சினிமா
புனித் ராஜ்குமார்

இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்

Published On 2021-10-30 08:00 GMT   |   Update On 2021-10-30 08:00 GMT
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் 2 பேருக்கு பார்வை கொடுத்து இருக்கிறார்.
நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர். 



இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றனர். அவரின் 2 கண்கள், 2 பேருக்கு பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News