சினிமா செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் வந்து சாமி தரிசனம்

Published On 2024-07-29 01:47 GMT   |   Update On 2024-07-29 01:47 GMT
  • ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
  • தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவர் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர்.

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் நேற்று தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் தனுஷ் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர். தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன்களோடு உருகி நின்று சாமி தரிசனம் செய்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News