சினிமா செய்திகள்

ஜெயம் ரவி

இரண்டாம் பாகம் இயக்க அண்ணனிடம் கேட்டிருக்கிறேன் - நடிகர் ஜெயம் ரவி

Published On 2022-09-20 08:30 GMT   |   Update On 2022-09-20 08:30 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தின் படக்குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வருகிற 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னை தரமணியில் 'பொன்னியின் செல்வன்' பட இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

 

பொன்னியின் செல்வன் - ஜெயம் ரவி

அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசியது, எனக்கு சுருட்டை முடி. இப்படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும். இதற்கு மேல் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது என்று, அதை ஸ்லோவ் மோஷனில் நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் - ஜெயம் ரவி

 

இதன் பிறகு சிறப்பாக என்ன செய்ய போகிறாய்? என்று அண்ணன் கூட கேட்டான். நீ தனி ஒருவன் 2 இயக்கு என்று கூறினேன். ஆனாலும், எனக்கும் அது தான் தோன்றியது. இதைப் பற்றி மணி சாரிடமும் கேட்டேன். அதற்கு அவர், இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் என்று கூறினார். இதை விட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.

ஜெயம் ரவி

 

ஆனால், இப்படத்தில் கற்று கொண்ட அனுபவங்களைக் கொண்டு இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சோர்வாடையும் போதெல்லாம் மணி சாரை பார்ப்போம். அவர் ஓடி கொண்டே இருப்பார். அவரே இடைவிடாமல் செயல்படும் போது நமக்கு என்ன என்று சுறுசுறுப்புடன் பணியாற்ற சென்று விடுவோம் என்றார்.

Tags:    

Similar News