இந்த எழுத்தும் பிரச்சினையை எழுப்பலாம்.. வைரலாகும் பார்த்திபன் பதிவு..
- மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -1.
- இந்த படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன்
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தின் ரூ.400 கோடி வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன்
அந்த பதிவில், " ரூ. 400 கோடியை கடந்தது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்பலாம்! எழுப்பினால்… இன்னும் ஒரு 100!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் எழுப்பிவிடலாம் என கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Crosses-400
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!