சினிமா செய்திகள்

திரிஷா

விவாகரத்தில் எனக்கு விருப்பம் இல்லை - நடிகை திரிஷா அதிரடி பதில்

Published On 2022-10-12 08:15 GMT   |   Update On 2022-10-12 08:15 GMT
  • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இதில் நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


பொன்னியின் செல்வன்

இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் கல்யாணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.


திரிஷா

இதற்கு பதிலளித்த திரிஷா, "கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விருப்பமில்லை. மிக மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக கூறிய என் நண்பர்களில் சிலர் கூட விவாகரத்தை நாடியுள்ளனர்.


திரிஷா

மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News