சினிமா செய்திகள்

மணிரத்னம்

null

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-07-19 03:07 GMT   |   Update On 2022-07-19 03:07 GMT
  • தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம்.
  • இவரின் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் உருவாகி வருகிறது.

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது.

மணிரத்னம்

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News