சினிமா செய்திகள்

வைஷாலி தாக்கர்

பிரபல நடிகை தற்கொலை.. கடிதத்தை கைப்பற்றிய போலீசார்..

Published On 2022-10-16 12:35 GMT   |   Update On 2022-10-16 12:35 GMT
  • தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி.
  • இவரின் தற்கொலை செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி  தாக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


வைஷாலி தாக்கர்

நடிகை வைஷாலி தற்கொலை செய்த அறையை சோதனை செய்த போலீசார் குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


வைஷாலி தாக்கர்

அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜூனில் நடக்க இருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோவையும் நீக்கியுள்ளார். இவரின் தற்கொலை இந்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News