சினிமா செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தால் சினிமாவிற்கு ரெட் கார்டு தான்.. மக்கள் இயக்கம் தகவல்

Published On 2023-07-12 08:08 GMT   |   Update On 2023-07-12 08:08 GMT
  • நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
  • இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சமீபத்தில் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.

மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

இதையடுத்து நேற்று 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளியே வந்த நிர்வாகிகள் சிலர், "அரசியலுக்கு வருமாறு விஜய்யை அழைத்தோம். அதற்கு அவர் நான் அரசியலுக்கு வந்தால், அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார். அவரது அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்று மீண்டும் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News