கிரிக்கெட் (Cricket)

அதிரடியாக ஆடிய ரூசோ

ரூசோ, பிருத்வி ஷா அபார ஆட்டம்... பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

Published On 2023-05-17 21:17 IST   |   Update On 2023-05-17 21:17:00 IST
  • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
  • அதிரடியாக ஆடிய ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார்.

தரம்சாலா:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News