ஆன்மிகம்

எண்ணற்ற பலன்கள் கிடைக்க பிள்ளையார் ஜாதகத்தை வழிபடலாம்

Published On 2016-09-02 09:30 GMT   |   Update On 2016-09-02 09:30 GMT
பிள்ளையார் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன.
பிள்ளையார் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட உள்ளம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும்.

இந்த ஜாதகத்தை வியாபார இடத்தில் வைத்தால் வியாபார விருத்தி ஏற்படும். சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

Similar News