வழிபாடு

அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடக்கம்

Published On 2022-09-23 06:58 GMT   |   Update On 2022-09-23 06:58 GMT
  • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது.
  • உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் 25-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.
  • 5-ந்தேதி அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் 10 நாட்களும் திருவிழா கொண்டாடப்படும்.

அதன்படி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் 25-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) இரவு அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் திருச்சி கருமண்டபம் வசந்தநகர் ஜெயநகர் வெற்றி விநாயகர் கோவிலில் 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News