வழிபாடு

பொறையாறு அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது

Published On 2022-11-12 08:47 GMT   |   Update On 2022-11-12 08:47 GMT
  • நாளை காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
  • நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.

பொறையாறில் பூரண புஷ்கலை சமேத திருமுடி அய்யனார் மகா சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பாலாலையம் செய்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

முன்னதாக கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டப பூஜை நடந்தது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன் நாடார், பரம்பரை அறங்காவலர் ரூபேஷ் நாடார் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News