வழிபாடு

தில்லையாடிமேட்டு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது

Published On 2022-11-10 06:51 GMT   |   Update On 2022-11-10 06:51 GMT
  • மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  • இன்று நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் மேட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.

திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கோவிலில் குடமுழுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.25-க்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது.

10 மணி அளவில் விமான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. 10.15 மணி அளவில் மூலஸ்தான மகா குடமுழுக்கு நடக்கிறது.

அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News