- ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு முக்கியமானது.
- கிரகங்களின் தாக்கத்தை வைத்தே வாழ்க்கை கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சிறப்பு உடையது. ஜோதிடத்தில், நவகிரகங்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் தாக்கத்தை வைத்தே அவர்களின் வாழ்க்கை கணிக்கப்படுகிறது. கிரகங்கள் செயலிழந்தால் தோஷங்கள் வரும் என கூறப்படுகிறது. கிரக தோஷங்களை நீக்கும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூரியன்:- சூரியனார் கோவில், இளையான்குடிக்கு அருகே உள்ள சேத்தூர்.
சந்திரன்:- திங்களூர், மானாமதுரை, திருவக்கரை, திருவிடைமருதூர், திருந்துதேவன்குடி.
செவ்வாய்:- வைத்தீஸ்வரன் கோவில், தேவிப்பட்டிணம் அருகில் உள்ள பெருவயல்.
புதன்:- திருவெண்காடு, மதுரை, மேலநெட்டூர், காசி.
வியாழன்:- திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடித்திட்டை, மேலப்பெருங்கரை, மாயூரம், திருத்தேவூர், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி, வாழகுருநாதன்.
சுக்ரன்:- கஞ்சனூர், திருவாடானை, திருவேற்காடு, திருவரங்கம், திருவெள்ளியங்குடி.
சனி:- திருநள்ளாறு, திருப்புகலூர், எமனேசுவரம், திருக்கொள்ளிக்காடு.
ராகு:- திருநாகேஸ்வரம், காஞ்சியில் உள்ள திருவூரகம், நயினார்கோயில், திருக்காளத்தி.
கேது:- கீழப்பெரும்பள்ளம், ராமேசுவரம் கொழுவூர்.