வழிபாடு

நவராத்திரி: இன்று 6-வது நாள் வழிபாட்டு முறை

Published On 2022-10-01 05:31 GMT   |   Update On 2022-10-01 05:31 GMT
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
  • இன்று 6-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

6-வது நாள் 1-10-2022 (சனிக்கிழமை)

வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)

பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.

திதி : சஷ்டி.

கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.

பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

Tags:    

Similar News