வழிபாடு

நவராத்திரி நாட்களில் என்ன கலரில் புடவை கட்டுவது?

Published On 2022-09-30 07:46 GMT   |   Update On 2022-09-30 07:46 GMT
  • உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
  • பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள், நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

26-ந் தேதி பச்சை,

27-ந் தேதி மஞ்சள்,

28-ந் தேதி நீலம்,

29-ந் தேதி கருநீலம்,

30-ந் தேதி சிவப்பு,

அக்டோபர் 1-ந் தேதி கிளிப்பச்சை,

அக்டோபர் 2-ந் தேதி இளஞ்சிவப்பு,

அக்டோபர் 3-ந் தேதி பச்சை/அரக்கு பார்டர்,

அக்டோபர் 4-ந் தேதி வெங்காய கலர்.

Tags:    

Similar News