வழிபாடு

ஓணம் பண்டிகை: நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2024-09-12 04:50 GMT   |   Update On 2024-09-12 04:50 GMT
  • வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் (14-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி திருவோண பூஜை நடைபெற உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

16-ந் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News