வழிபாடு

வைணவர்கள் நெற்றியில் நாமம் போட்டு கொள்வதற்கான காரணமும்... தத்துவமும்...

Published On 2023-03-09 06:59 GMT   |   Update On 2023-03-09 06:59 GMT
  • பெருமாள் மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள்.
  • ஐதீகப்படி நாமம் என்பது இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் கொண்டதாக இருக்கும்.

பெருமாள் மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். ஐதீகப்படி நாமம் என்பது இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் கொண்டதாக இருக்கும். இதில் வெள்ளைக் கோடுகள் திருமாலை குறிக்கும். சிவப்பு கோடு லட்சுமியைக்குறிக்கும்.

லட்சுமி ஒரு போதும் பெருமாளை பிரிந்து இருக்கமாட் டார். இந்த தத்துவத்தை உணர்த்தவே இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே சிவப்பு நிற கோடு போட்டு நாமம் இட்டுக்கொள்கிறார்கள்.

தினமும் நெற்றியில் இத்தகைய நாமம் தரிப்பதன் மூலம் பெருமாள், லட்சுமி இருவரின் அருளாசி நமக்கு கிடைக்கும். நாமம் தரிக்கும் ஒவ்வொரு நாளும், நன்மை தரும் நாளாகவே இருக்கும்.

Tags:    

Similar News