வழிபாடு

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நாளை நடக்கிறது

Published On 2022-11-04 08:00 GMT   |   Update On 2022-11-04 08:00 GMT
  • 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது.
  • ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி நடக்கிறது.

ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சனி மகாபிரதோஷ வழிபாடு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பிரதோஷ நாயகர் வலம்வருதலும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கும்பபூஜையும், ஹோமங்களும் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் அன்னாபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News