வழிபாடு

திருப்பம் தரும் திருப்பதி பிரம்மோற்சவம்

Published On 2022-09-30 07:38 GMT   |   Update On 2022-09-30 07:38 GMT
  • புரட்டாசி பிரம்மோற்சவ விழா தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • ‘திருப்பதி வந்தால் திருப்பம் வரும்’ என்ற சொல்வழக்கு உருவானது.

வாழ்க்கையில் திருப்பம் தரும் தெய்வமாக இருப்பவர், திருப்பதி ஏழுமலையான். இதனால்தான் 'திருப்பதி வந்தால் திருப்பம் வரும்' என்ற சொல்வழக்கு உருவானது. திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எளிமையாகவே நடத்தப்பட்டது. மாடவீதிகளில் ஏழுமலையான் வீதி உலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சீரான காரணத்தால், முன்பு போலவே, வெகு விமரிசையாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, இன்று (27.9.2022) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 5-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும், அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர, மற்ற பிரமுகர்களுக்கான சலுகைகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவை ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களுமே இலவச தரிசன வரிசையில் மட்டுமே ஏழுமலையானைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News