மத்தூர் அருகே கள்ளச்சாரயம் விற்ற 2 பேர் கைது
- கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மாந்தோப்பில் சாராய ஊரல் வைத்திருந்த சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னலேரஅள்ளி பகுதியில் மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை வைத்திருந்து மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது36 ), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.