செய்திகள்

தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை

Published On 2017-05-11 11:56 GMT   |   Update On 2017-05-11 11:56 GMT
சுவாமிமலை அருகே தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:

கும்பகோணம் சுருட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் துர்கா தேவி (19). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இங்கு யாரிடமும் பேசாமலும், சரிவர சாப்பிடாமலும் இருந்துள்ளார்.இதனால் தாய் வளர்மதி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த துர்காதேவி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News