செய்திகள்

திருமங்கலம் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த வாலிபர் திடீர் மாயம்

Published On 2018-07-24 10:16 GMT   |   Update On 2018-07-24 10:16 GMT
திருமங்கலம் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த வாலிபர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Missingcase

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் மகன் சின்னமாரிமுத்து (வயது 22).

கடந்த மாதம் மேலக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை கத்தியால் குத்தியது தொடர்பாக சின்னமாரிமுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் திருமங்கலம் தாலுகா போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சின்னமாரிமுத்துவுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி வெளியே சென்ற சின்னமாரிமுத்து பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. இதுகுறித்து அவரது தந்தை வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னமாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News