செய்திகள்
கோப்பு படம்

நண்பர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்ற கப்பல் என்ஜினீயர் மாரடைப்பால் மரணம்

Published On 2019-08-27 10:46 GMT   |   Update On 2019-08-27 10:46 GMT
புதுச்சேரி அருகே நண்பர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கப்பல் என்ஜினீயர் திடீர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டை தெப்பகுளம் வீதியை சேர்ந்தவர் கந்தவேலு (வயது52). இவர் மும்பையில் தங்கி தனியார் கப்பல் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாய்கலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மனைவி-மகனை பார்க்க திப்புராயப்பேட்டைக்கு வந்து இருந்தார்.

நேற்று கந்தவேலு பொழுது போக்குவதற்காக தனது நண்பர்களுடன் கடலில் மீன்பிடிக்க படகில் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது திடீரென கந்தவேலுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

கந்தவேலு வலியால் துடித்ததால் மீன்பிடிப்பதை கைவிட்டுவிட்டு அவரது நண்பர்கள் உடனடியாக படகில் கரை திரும்பினர். கந்தவேலுவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கந்தவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி சாய்கலா கொடுத்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News