என் மலர்
நீங்கள் தேடியது "Heart Attack"
- பில்டிங் செய்து கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார்.
- அவருக்கு இதயத்தில் சில பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
டாக்கா:
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார். 36 வயதான தமீம் இக்பால், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தமீம் இக்பால் விளையாடினார். முஹம்மதின் ஸ்போட்டிங் கிளப் அணிக்கு தலைமை தாங்கிய தமீம் இக்பால் சைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக விளையாடினார்.
அப்போது பில்டிங் செய்து கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார். இதனையடுத்து அங்கிருந்து மருத்துவர்கள் தமீம் இக்பாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டெபாசிஸ் சவுத்ரி, தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டது. அவருக்கு இதயத்தில் சில பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவருடைய உடல் நலம் தற்போது எப்படி இருக்கிறது என்று இனி தான் தெரியவரும். முதலில் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமக்கு உடல்நலம் சரியில்லை என்றும் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
- கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும்.
- உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.

உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.
இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.
சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- வேல்முருகன் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50) இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் வேலுமுருகன் அலறினார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர்.
- உடலை பிரரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு தனது குழுவினருடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜா முகமதுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அவருடன் வந்திருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராஜாமுகமதுவின் உடலை விமான நிலைய போலீசார் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து பக்ரைனுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் பயணம் செய்ய 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.
பயணி இறந்ததை தொடர்ந்து அந்த விமானத்தை ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். இதனால் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.
- கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது.
- தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
சிம்லா :
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.
இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:-
சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன.
கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது.
நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.
இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.
முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் 'டிரெட்மில்' சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.
இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. மது அருந்துவதை குறைக்கவேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
- குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு.
- மாரடைப்பு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்துள்ளது.
ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.
அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை காப்பாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை சாலியத் மாரடைப்பால் இன்று காலமானார்.
- இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
சாலியத்:
மங்களூரு கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை.
சாலியத் தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
- பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
- இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நெய்டா செக்டார் 21ஏவில் உள்ள ஸ்டேடியத்தில் 52 வயதான நபர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஸ்டடியம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழு நபரின் உயிரை காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள், ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து செக்டார் 24 காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி அமித் குமார் கூறுகையில், "இறந்தவர் நொய்டா, செக்டார் 11ல் வசிக்கும் மகேந்திர ஷர்மா என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
- கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார்.
- கசான் கான் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்தை மலையான திரைத்துறையின் தயாரிப்பாளர் என்.எம்.பாதுஷா உறுதிப்படுத்தி உள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர் தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞர், சேதுபதி ஐ.பி.எஸ், பிரியமானவளே உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.
இதேபோல், கன்னடம், மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
- பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.
திருப்பூர் :
அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.
ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
- அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள பனகஹள்ளி, ஈ..எம்.பி. தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). விவசாயி. இவரது தோட்டத்தில் கடந்த 13 மாதங்களாக சின்னசாமி (60). என்பவர் வேலை பார்த்து வந்தார்.
பழனிச்சாமி ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை மாவட்டம், அன்னூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பழனிச்சாமிக்கு போன் செய்த சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். பழனிச்சாமி, உடனடியாக தனது தம்பி துரைசாமிக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்சுடன் சென்ற துரைசாமி, சின்னசாமியை மீட்டு, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னச்சாமி இறந்துவிட்டதாக கூறினர்.
இறந்த சின்னசாமியின் குடும்பத்தினர் குறித்து தகவல் எதுவும் தெரியாததால், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சின்னசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.