செய்திகள்
வழக்கு பதிவு

முழு ஊரடங்கை மீறிய 132 பேர் மீது வழக்கு

Published On 2021-06-01 11:07 GMT   |   Update On 2021-06-01 11:07 GMT
முககவசம் அணியாத 79 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.15 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் போலீசார் அபராதமாக விதித்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 132 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் நேற்று முககவசம் அணியாத 79 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.15 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் போலீசார் அபராதமாக விதித்தனர்.
Tags:    

Similar News