செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-06-20 12:41 GMT   |   Update On 2021-06-20 12:41 GMT
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 294 ஆகும்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,446 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இ்வர்களில் 292 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். அதே நேரத்தில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 294 ஆகும்.
Tags:    

Similar News