செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-30 10:50 GMT   |   Update On 2021-06-30 10:50 GMT
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றியபள்ளியில் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றியபள்ளியில் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு காலனி, வாங்கப்பாளையம், பஞ்சமாதேவி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் அதிகாலை 4 மணி முதல் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி தீர்ந்து போனதால் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News