செய்திகள்
வழக்கு பதிவு

வேலாயுதம்பாளையம் அருகே ஊரடங்கை மீறியதாக 5 பேர் மீது வழக்கு

Published On 2021-06-30 11:01 GMT   |   Update On 2021-06-30 11:01 GMT
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டக்கடை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், நெப்போலியன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டக்கடை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், நெப்போலியன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றியதாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி குளத்துபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 25), குளித்தலை வெங்கடமுருகன் (32), தவுட்டுபாளையத்தை சேர்ந்த முருகேசன் (45), வேட்டமங்கலத்தை சேர்ந்த பிரவீன் (23), ஈரோடு மொடக்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (33) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News