செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-06-30 15:23 GMT   |   Update On 2021-06-30 15:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் மற்றும் 70 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி இறந்தனர்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றிஇறந்துள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 39 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 ஆயிரத்து 414 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,045 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. கடந்த 2 மாதங்களாக பாதிப்பு 100-க்கும் மேல் இருந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 895 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு 2 மாதங்களுக்கு பிறகு குறைந்து நேற்று 100-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. அதன்படி நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News