உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வழி மறித்த ஒற்றை காட்டு யானை

Published On 2023-05-17 09:04 GMT   |   Update On 2023-05-17 09:04 GMT
  • பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன.
  • ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளில் அதிக அளவு பலாத்தோட்டங்கள் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானை, கரடி போன்ற வன விலங்குகள் சாலையில் தற்போது அதிகமாக நடமாடி வருகின்றது . இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுற்றி தஞ்சமடைந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது சாலையில் செல்லும் வானங்களை சேதப்படுத்தியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வந்தது. கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகளின் கண்களில் அகப்படாத அந்த யானை நேற்று மாலை குஞ்சப்பனை பகுதியில் உள்ள சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சிறை பிடித்தது சாலையின் நடுவில் நின்றிருந்த யானையால் அப்பகுதியில் வாகனங்கள் மேலும் கீழும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்றிருந்த அந்த யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Tags:    

Similar News