உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நெடுங்காட்டில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

Published On 2023-03-21 09:56 GMT   |   Update On 2023-03-21 09:56 GMT
  • நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது.
  • குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது. அந்தன்பேரில், போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட ரூ.600 மதிப்பிலான பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் கலந்தர் ராஷித் (வயது34) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News