உள்ளூர் செய்திகள் (District)

மணல் திருடிய 2 பேர் கைது

Published On 2023-05-19 06:49 GMT   |   Update On 2023-05-19 06:49 GMT
  • மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • போலீசார் நடவடிக்கை

அரியலூர்:

அரியலூர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட சிவக்குமார் (வயது 25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News