உள்ளூர் செய்திகள்
ஓசூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் மார்கழி மாத பவுர்ணமி திருநாள் சிறப்பு வழிபாடு
- இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராகு, கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி திருநாள் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி கோவிலில் உள்ள, ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதே போல மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மகாதீபாராதனையும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதி யுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.