உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்- போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

Published On 2022-09-13 15:02 IST   |   Update On 2022-09-13 15:02:00 IST
  • கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
  • தகுதிச் சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவல கத்துக்கு உட்பட்ட சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, தருமபுரி, அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முறையான ஆவணம் உள்ளதா? என்றும், விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி கள் கூறுகையில், தருமபுரி யில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

தகுதிச் சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 8 மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய டிரைவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வாகன தணிக்கை நடத்தப்படும்.

இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News