உள்ளூர் செய்திகள் (District)

சாலையில் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீர் தீ பிடித்ததால் பரபரப்பு

Published On 2024-08-14 09:28 GMT   |   Update On 2024-08-14 09:28 GMT
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
  • ஸ்கூட்டர் தீ பிடித்து மளமளவென எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மேல் எண்டபட்டியை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இந்நிலையில் இன்று காலை தனது நிலத்தில் பயிரிட்ட சாமந்தி பூக்களை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடுத்து கொண்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் கொண்டு சென்றார்.

பின்னர் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிய போது தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ராமக்காள் ஏரி அருகே சென்றபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை கண்ட வடிவேல் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கி பார்த்தபோது ஸ்கூட்டர் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வடிவேல் ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இது குறித்து தருமபுரி டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News