உள்ளூர் செய்திகள் (District)

கிருஷ்ணகிரியில் நாளை நடக்கிறது: கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் -மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2022-10-21 09:37 GMT   |   Update On 2022-10-21 09:37 GMT
  • கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
  • மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்குகிறார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்அ-மைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்குகிறார். இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News