உள்ளூர் செய்திகள் (District)

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா

Published On 2022-09-20 07:46 GMT   |   Update On 2022-09-20 07:46 GMT
  • தேதிப்படி திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது
  • 2 நாட்கள் நடக்கிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

இந்தத் திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்றுவந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.

இருப்பினும் பாரம்பரிய மாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும் மாலை ஆராதனையும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 2-வது நாளான 24-ந்தேதிகாலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும் முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணைப் பவனியும் அதைத்தொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொரு ளாளர் தீபக் மற்றும் இணை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News