உள்ளூர் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
- வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்:
தோட்டக்குறிச்சி சேங்கல் மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.