உள்ளூர் செய்திகள்

மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை-தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு

Published On 2023-09-11 08:40 GMT   |   Update On 2023-09-11 08:40 GMT
  • ஸ்தோத்திர பண்டிகை கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்:

சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.நேற்று மாலை வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான்ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

சாராள் தக்கர் கல்லூரி செயலர் சவுந்தரபாண்டியன் செய்தி அளித்தார். கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் காளித்துரை, அற்புதராஜ், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், ஏ.ஜி.கணேசன், துரைராஜ் பாண்டியன், மோசே ராம்ராஜ், அரியப்புரம் ஊராட்சித்தலைவர் தினேஷ்குமார், துணைத்தலைவர் சக்திகுமார், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News