உள்ளூர் செய்திகள் (District)
null

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி: 3 பேர் பெயர் பட்டியல் தயாரிப்பு

Published On 2024-10-04 06:19 GMT   |   Update On 2024-10-04 07:33 GMT
  • இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திம் வருகிறது.
  • மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும்.

சென்னை:

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுவுக்கு மாநில அரசுப் பணியான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுகிறார். புதிய தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்ய பிரதசாகுவுக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.


இதற்காக தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேரின் பெயர்களை கொண்ட பட்டியலை மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு செயலாளர் அளவிலான 3 பேர் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியே, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை நடத்துவார். எனவே அதற்கேற்ப தேர்தலை மனதில் வைத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Tags:    

Similar News