உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அரசு பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணி- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-07-26 08:51 GMT   |   Update On 2023-07-26 08:51 GMT
  • புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
  • பணிகளை தொடங்கி வைத்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீ ட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரக்கு மார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியா் ஜோதிலெட்சுமி, தேசிய மாணவர் படை அலுவலா் அருள்தாஸ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செல்வி ஆகியோர் முன்னி லை வகித்தனா். தமிழா சிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை தொடங்கி வைத்து கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். பின்னா் பள்ளி மாணவர்களை கொண்டே புதிய வகுப்பறை கட்டிட த்திற்கான செங்கல்களை எடுத்து வைக்கும்படி கூறினார். இதனை எதிர் பார்க்காத மாணவர்கள் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளிக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துக் குமார், குமார், மாவட்ட துணைச் செய லாளா் பொய்கை மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News