உள்ளூர் செய்திகள் (District)

கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

Published On 2023-06-03 06:21 GMT   |   Update On 2023-06-03 06:21 GMT
  • கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் 9-ந்தேதி நடக்கிறது
  • பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கறவை மாடு வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் அல்லது 9385307022 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து பெயர் பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News