உள்ளூர் செய்திகள் (District)
இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
- இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்
- மங்களமேடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் தமிழரசன் (வயது 23). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.